எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு. இந்த உண்மையை தோல் உரித்து அனுப்பியவர் திரு. பகவதி, சாஸ்த்ரிகள், ஜோஸ்யர், திருவாரூர்
To post your articles mail me ganeshfriends@gmail.com
செவ்வாய் பூமி காரகர் தான் மங்கள காரகர் தான் (வீடு மற்றும் கல்யாணம் ஆகிய போகங்களையும் யோகங்களையும் ஏற்படுத்தும் ஒரு க்ரஹம் ) ஆனாலும் செவ்வாய் கிழமைகளில் நாம் க்ருஹ பிரவேஷமோ கல்யாணமோ செய்யவதில்லை.... பொதுவாகவே செவ்வாய் என்பது ஒரு போர்குணம் மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் காரணங்களுக்கான ஒரு க்ரஹமாகத்தான் இருக்கிறது. வன்முறை சண்டை சச்சரவு ஆகியவற்றையும் ஏற்படுத்தும். இது முக்கியமாக எப்பொழுது ஏற்படுகிறது என்றால் கூட்டங்கள் அதிகமாக சேரும்போதும் சேருமிடத்திலும் இந்த செவ்வாய் க்ரஹத்தின் தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. அதனால் செவ்வாய்க்கிழமைகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் கூட்டம் கூடும் இடங்களில் வாக்குவாதம் முற்றி அது பெரிய சண்டையாக போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இந்த செவ்வாயின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சிந்தனை குறைந்து கோபம் மட்டுமே முன் நிற்பதால் சாதாரண விவாதமோ பேச்சோ பெரிய சண்டையில் தான் முடியும். அது மட்டுமல்லாமல் ஆய்த பிரயோகம் மற்றும் ஆயதங்களினால் மற்றும் தீயினால் விபத்தும் ஏற்படும் அபாயமும் இந்த செவ்வாய்க்கு உண்டு. ஆகையால் தான் பல பேர் கூடி நடத்தப்படும் ஸுபமுஹுர்தங்கள் சந்தோஷமாக நடைபெற செவ்வாய் கிழமைகளை தவிர்ப்பது நல்லது. இதை நீங்கள் செவ்வாய் ஹோரைகளிலேயே புரிந்து கொள்ளலாம்
To post your articles mail me ganeshfriends@gmail.com
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா... ஸ்ரீகணேசா... சரணம்!
To post your articles mail me ganeshfriends@gmail.com
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். Article from aanmikam blogspot
To post your articles mail me ganeshfriends@gmail.com
தீர்காயுஷ்யமஸ்து...இந்த ஒரு ஆசீர்வாதத்திற்கு உதாரணமாக ஒரு ஆணோ பெண்ணோ இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் சனைஸ்சர க்ரஹதின் அனுக்ராஹமில்லாமல் இருக்க முடியாது. அந்த மாதிரி ஆயுஷைக்கொடுப்பவர் சனைஸ்சரன் தான் ஆயுஷயும் அவர்தான் கொடுக்கிறார் ஆயில் பிசினஸ் செய்யும் யோக்யதையும் அவர்தான் கொடுக்கிறார். சில வருஷங்களுக்கு முன் எனக்கு தெரிந்த ஒரு பெண் கல்யாண வாழ்க்கை தோல்வி மற்றும் வேறு சில பிரச்சினைகளினால் 'நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்' என்று சொன்னார். ஜாதகத்தை வாங்கி பார்த்தேன் அதில் இருந்த இதே இந்த சனியின் பலத்தை வைத்து தான் சொன்னேன். நீ தூக்கு போட்டுக்கொண்டாலும் கயறு தான் அறுந்து போகும் உனக்கு ஒன்றும் ஆகாது ஏன் வீணாக கயருக்கு செலவு செய்கிறாய் wasteful attempt என்றேன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.. வயது ஒன்றும் ஆகவில்லை என்றாலும் அந்த மாதிரி பிரச்சினைகளில் கூட உயிருக்கு ஒன்றும் சேதமில்லை என்பதுதான் இதிலிருக்கும் உண்மை. விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் சூர்யநிடமிருந்து 1,433,449,370 கிலோமீட்டர் தூரத்தில் சனி இருப்பதாக இதுதான் சூர்யநிடமிருந்து மிக தொலைவில் உள்ள க்ரஹம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நமது ரிஷிகள் பல யுகங்களுக்கு முன்னே இதை கண்டுபித்து இருந்ததனால் தான் சனிக்கு மந்தன் என்ற பெயரும் சனியை இருட்டு முடம் கருப்பு ஆகிய விஷயங்களுக்கும் சொல்ல்லிவைத்து இருக்கிறார்கள். எப்படி? எப்படி என்று கேள்வி தான் கேட்கத்தான் முடியும் கேட்டு ஆச்சர்ய படத்தான் முடியும் எவ்வளவு பெரிய சாஸ்த்ரம் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது...... சனிக்கு நீதிபதி என்ற ஒரு பெயரும் உண்டு.. இது கோர்டில் உள்ளவர்களின் ஆடைகளைப்பார்த்தே புரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த ஏழரை இருக்கிறதே...அட அட...ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் யாரும் தப்ப முடியாது...இந்த காலம் முடிஞ்சு அடக்கம்னா என்ன அகந்தை கிலோ என்ன விலைன்னு கேட்கவைக்கிறார் பாருங்க...சனைஸ்சரன் VOW நீதிபதி என்ற பெயர் ரொம்பவே பொருத்தம்.
To post your articles mail me ganeshfriends@gmail.com
அஸ்தங்கம் (combusion ) என்று ஒன்று ASTROLOGIYIL சொல்லப்படுகிறது. ஒரு ராசியில் சூர்யனுடன் வேறு ஒரு கரஹம சேரும்போது. சேர்ந்த அந்த கரஹம சூர்யனுடன் சேர்ந்து இருப்பதால் தன்னுடைய பலத்தை இழக்கிறது. ஆனால் புதனுக்கு மட்டும் இந்த அஸ்தங்கம் இல்லை பெரும்பாலும் புதன் சூர்யனுடனயே இருக்கும். அப்படியே போனாலும் ஒரு 28 டிகிரிக்கு மேல் சூரயனை விட்டு போக முடியாது. சூர்யன் தன்னுடைய ஆகர்ஷன சக்தியால் புதனை இழுத்து மீண்டும் தன்னுடனையே இருக்குமாறு செய்துவிடுவார். ஆகையால் புதன் சூர்யனுடன் சேர்ந்து இருப்பதால் எந்த விதத்திலும் தன்னுடைய பலத்தை இழப்பதில்லை. புதஆதித்ய யோகமே ஏற்படுகிறது. ஸ்ரீ ராமர் ஜாதகம் நீங்கள் பார்த்திருக்கலாம் அதில் 5 கரகங்கள் உச்சமாக இருக்கும் ஆனால் புதன் மட்டும் உச்சமில்லை ஏனென்றால் புதன் உச்ச மடைவது கன்னியில் sooryan உச்சமடைவது மேஷத்தில். ஸ்ரீ ராமருக்கு சூர்யன் உச்சம் அதாவது மேஷத்தில் சூர்யன் அதாவது சித்திரை மாதத்தில் அவர் ஜனனம். அப்படி இருக்கும் பொது புதன் மேஷத்தில்தான் இருக்க வேண்டும். ஆகையால் தான் புத உச்சமில்லை. புதன் வித்யா காரகன் (படிப்பு மட்டும் சாதுர்யமான புத்திக்கு காரணகர்த்தா ) புதன் வைஷ்யன் அதாவது ஒருவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்றும் ஆசையை யும் நிர்பந்தத்தையும் ஏற்படுத்தும் க்ரஹம். லக்னத்திலிருந்து கேந்த்ரம் என்று சொல்லப்படும் 1,4,7, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும். அல்லது புதன் உச்சமாகவோ துலாதிலோ இருந்தாலும் இந்த சொந்த தொழிலை கொடுப்பார். இது பத்ர யோகமாகும் குருவிற்கு இருப்பது போல புதனுக்கும் கேந்த்ராதிபத்திய தோஷம் உண்டு. பிரிண்டிங் publishing எழுத்து வேலை கணக்கர் ஆடிட்டர் ஆலோசகர் தூதுவர் ஆகிய உத்தியோகங்களை இந்த புதனே ஏற்படுதிக்கொடுக்கிறார்......
To post your articles mail me ganeshfriends@gmail.com
இனிமேல் கல்யாணம்தான் க்ரஹபிரவேஷம்தான் குழந்தை பாக்கியம் உண்டு என்று பல விதமாக சந்தோஷமான விஷயங்களுக்கு ஏங்கி இருப்பவர்களுக்கு அந்த நம்பிக்கையே ஜாதகத்தில் அதற்கான பாக்யம் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து மகிழ்ச்சி பொங்க வைக்கும் ஒரே க்ரஹம் குரு தான்... மற்ற க்ரஹங்களும் இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும் குருவே இதெற்கெல்லாம் பிரதானமாக விளங்குகிறார். இந்த குரு ஜாதகத்தில் ஒரு ஸ்தானத்தில் இருப்பதை விட அந்த ஸ்தானத்தை பார்வை இடுவது இன்னும் சிறப்பாக இருக்கும். லக்னத்திற்கு 5ல் குரு உள்ள ஜாதகத்தை வைத்து புத்திர பாக்யம் இருக்குமா என்றால்....இருக்கு ஆனா கொஞ்சம் லேட்டாகும், கொஞ்சம் பலம் இல்லாமல் இருக்கு அதனால் இதோட சேர்க்கபோற ஜாதகத்தில் இன்னும் கொஞ்சம் பலமான புத்திர பாக்யம் இருக்கறதா பாத்தீங்கன்னா நல்லது இப்படி பலவாறாக வரும் ஆனா வராது என்ற ரீதியில் ஜோச்யர்களை குழப்பமடயவைக்கும் அதே குரு..... லக்னத்திலிருந்து 5ம் இடத்தை பார்க்கிறமாதிரி ஒரு ஜாதகம் வந்தால் ஆண குழந்தை நிச்சயம், பெயர் செலக்ட் பண்ணி வைத்துவிடுங்கள் என்ற நம்பிக்கையை சொல்லும் நிலையை ஏற்படுத்தும் இதுதான் குரு நின்ற ஸ்தானத்திற்கும் அதே ஸ்தானத்திற்கு குருவின் பார்வை ஏற்படுவதற்கும் பெரிய வித்யாசம். ஆனால் இவ்வளவு பெரிய BENIFIC PLANET ராஹு கேது சனியுடன் சேர்ந்து இருக்கும்போது, குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது, அதாவது ஒரு உயர்வான சிந்தனையை ஏற்படுத்தும் ஒரு க்ரஹம் சற்றே மாசு பட்டு பலன்களை கொஞ்சம் குறைவாகவோ ஏதிற்பதமாகவோ அளிக்கிறது. ஜாதகத்தில் சந்திர கேந்த்ரங்களில் அதாவது சந்த்ரநிளிருந்து 1,4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால் கஜ கேசரி யோகம் ஏற்படுகிறது..அதாவது மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... .......விழும் அந்த மாதிரி ஒரு சிறப்பான அமைப்பு.
To post your articles mail me ganeshfriends@gmail.com