ஒரு சமயம் நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் ஸூதபௌராணிகரை, “விரும்பும் பலத்தை வரத்தாலும் தவத்தாலும் எவ்வாறு விரைவில் பெற முடியும்”? என்று கேட்டனர். ஸூதரும் பகவான் நாரதருக்குக் கூறியதைச் சொல்லுவதாகச் கூறிச் சொல்ல ஆரம்பித்தார். நாரதர் பிறருக்கு அருள் புரிய பூவுலகம் சென்றார். அங்குத் துன்புற்ற மக்களைக் கண்டார். “இவர்களது துன்பத்தைப் போக்கும் வழி என்ன?” என்று அறிவதற்காக விஷ்ணு லோகம் சென்று பகவானை வேண்டினார். மஹாவிஷ்ணுவும் நாரதரிடம். “நாரதா, கேள் ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் ஸத்ய நாராயண விரதத்தைச் செய்யலாம்.